பெண் பேராசிரியரின் நிர்வாண போராட்டம்..!
ஆடை இல்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்று. ஆனால் இங்கிலாந்து மற்றும் பொதுவெளியில் நிர்வாணமாக நிற்பது குற்றம் அல்ல. ஆனால் பிறரை ஒருவர் துன்புறுத்த ஆடைகளை கலைந்தால் அது குற்றமாகும்.
விலங்குகள் நல ஆர்வலர்கள் விலங்குகளின் தோலை பயன்படுத்துவதில் இருந்து ஆடை இல்லாமல் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதேபோல பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இவ்வாறு போராடியுள்ளனர். ஆனால் இப்பொழுது அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு பெண் பேராசிரியர் உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ள ஒருவர் ஆடை இல்லாமல் அடிக்கடி அரசியல் போராட்டம் நடத்தி வருகிறார். ஒரு பொருளாதார பேராசிரியராக தனது துறையில் ஆண்களின் ஆதிக்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் வெறும் இரண்டு பெண்கள் மட்டுமே பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் ஆண்களை அதிகம் உள்ளதாக ஆண்களின் பார்வையில் மட்டுமே கொள்கைகள் ஒதுக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





