கோவையில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்..!
கோவையில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள வணிக வளாகத்தில் வரிசையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நடவடிக்கை அடுத்த அடுத்த நாட்களில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





