மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி பாலக்கரையை சேர்ந்த 91 வயதான கிருஷ்ணன் என்பவரது மனைவி 86 வயதான சம்பூர்ண அம்மாள் உயிரிழந்துள்ளார்.

 

அப்போது அழுது கொண்டே இருந்த கணவரும் உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கிருஷ்ணன் சம்பூர்ண அம்மாள் தம்பதியின் உடல்கள் மண்ணச்சநல்லூரில் அடக்கம் செய்யப்பட்டது.