மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா..!
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.
திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.இந்நிலையில் தற்போது தன்னை தமிழில் அறிமுகம் செய்த சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்தின் மூலம், மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மாளவிகா.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




