3 குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் பரிசு.!

க்கள் தொகை அதிகரிப்பதற்காக மேற்கு சீனா பகுதியில் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை குறைந்தால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் அறிவித்துள்ளது.

 

மேலும் குழந்தை மூன்று வயதை எட்டும் முன்னரே அவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கட்டணம், வீடு வாங்குவதற்கு மானிய கோரிக்கை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் வேறு சில மாகாணங்களும் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளன. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் சிறிய அளவிலான மானியங்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply