--- --:--:-- --

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் தயாரிப்புகள் தீவிரம்..!

9

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் கலை கட்ட தொடங்கிவிட்ட நிலையில் திருச்சியில் விதவிதமான கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. 17 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து தயாரிக்கப்பட்ட கேக்குகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்னரே அதற்கான கலவை தயாரிக்கப்படுகிறது. பேரிச்சை, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, முந்திரி கலவையுடன் மது வகைகளை சேர்த்து நன்றாக ஊறி வரும்போது இவற்றைக்கொண்டு கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

 

மேலும் பலவிதமான கிரீம்கள் அல்லது குறைந்த அளவில் கேக் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொரொனா அச்சத்தின் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொரொனா காலத்தில் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்து வழங்கி வருகின்றனர் கேக் விற்பனையாளர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon