சென்னையில் மழை காரணமாக ஆழ்வார்பேட்டையில் தேங்கியுள்ள மழை நீர்..!
சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முக்கிய சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விட்டு விட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக தற்போது ஆழ்வார்ப்பேட்டை, கவிஞர் பாரதிதாசன் சாலையில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கார்ப்பரேஷன் கேட்கும்போது தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பகுதிக்கு உட்பட்ட துணை மாநகராட்சி ஆணையர் இந்த பகுதியை ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார்.
இருந்தாலும் இந்தத் தண்ணீரை போர்க்கால அடிப்படையில் வற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென இருக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.






