பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. பொது முடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவுகளின் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும். கடனுக்கான மாதத் தவணையை செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.