காசி 6 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி 6 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.

 

சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 20ஆம் தேதி இரண்டாவது முறையாக ஆறு நாள் காவலில் எடுக்கப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறும் போலீசார் அவனுக்கு உதவிய மேலும் சிலர் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காசி பின்னர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Leave a Reply