மதுபானங்களை வீடு தேடி சென்று விற்கும் திட்டம்
வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 -2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ் ஆன்லைனில் மதுபானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மதுக்கடைகளை அமைக்க டெண்டர் முறையில் ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திராட்சை உற்பத்தி விவசாய வருமானத்தை அதிகரிப்பதற்கும், திராட்சை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் வொய்ன் மதுவை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா இடங்களில் 15 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




