--- --:--:-- --

ஈரான் நாட்டில் நிலநடுக்கம்

7

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆப்கான் எல்லையோரத்தில் உள்ள சங்சன் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

 

இந்த நிலநடுக்கம் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல ஊர்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon