மேடையிலே நடனமாடி கலைஞர்களை உற்சாகமூட்டிய ராகுல் காந்தி

சத்தீஷ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் நடனத்திரு விழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தானும் நடனமாடி கலைஞர்களை உற்சாக மூட்டினார்.

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பழங்குடியின நடனத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு நடன திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது மேடையிலேயே கலைஞர்கள் வந்து நடனமாடினார். ராகுல் காந்தியும் பழங்குடியினர் தொப்பி அணிந்தபடி மேலே சென்று கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.

 

மூன்று நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவில் 25 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 350 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


Leave a Reply