6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,உள் மாவட்டங்களில் லேசான மழையும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply