குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள்நீதிமய்யம் பங்கேற்காது என அந்த கட்சி அறிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் திமுக சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது.
இதில் மக்கள்நீதிமய்யம் பங்கேற்கும் என அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து திமுக சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து மக்கள்நீதிமய்யம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் அருணாச்சலம், சவுரிராஜன், செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது திமுகவின் பேரணியில் பங்கேற்கவில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. கமலஹாசனின் வெளிநாடு சென்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.