திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் இயற்கை விவசாயி நம்மாழ்வார் போன்ற வேடமணிந்தவர்களுடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது.
தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தென்னரசு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தான் நேர்மையானவன் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கும் வகையில் திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம், இயற்கை விவசாயி நம்மாழ்வார் போன்ற வேடமணிந்தவர்களை உடன் அழைத்து வந்தார்.
அவர்கள் தென்னரசுக்கு மாலை அணிவித்து ஆசிர்வாதம் செய்தனர். இந்த காட்சியை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி