அரசுப் பேருந்துகளில் குடை பிடித்து பயணம் செய்யும் பயணிகள்!

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் அரசு பேருந்து ஒன்றில் கூரை ஒழுகியதால் அதன் ஓட்டுனர் இருக்கையில் குடையை பொருத்திக்கொண்டு பேருந்தை இயக்கினார். திண்டுக்கல் நகரம் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

 

திண்டுக்கல்லில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் அரசு பேருந்தின் கூரை சேதமடைந்து இருந்ததால் பேருந்திற்கு உள்ளேயே மழைநீர் ஒழுகியது. அதில் பயணித்தவர்கள் பேருந்திலேயே குடைபிடித்து இருந்தனர்.

 

பயணிகளின் நிலை இவ்வாறு இருக்க பேருந்து இயக்கிய ஓட்டுநர் தனது தலைக்கு மேலே குடை பொருத்தி வைத்து தனது பணியை தொடர்ந்தார்.


Leave a Reply