காதலிக்காக காதலன் செய்த செயல்..!
காதலிக்காக பெண் வேடமிட்டு பேருந்து நிலையம் சென்ற நபர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுகாதார பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் பொழுது தனது காதலி போல் வேடமிட்டு போலியாக நடிக்க முயன்ற பொழுது பிடிபட்டார்.
அவரது கைரேகைகள் உண்மையான கைரேகையுடன் பொருந்தாது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தனது காதலிக்காக போலியாவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.





