கடலுக்கு அடியில் வெடிக்கும் எரிமலை..!
திருவள்ளூர் அருகே மாநில கல்லூரி மாணவர் ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும் போது கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் உயிரை விடுவதற்கு முன்பாக சக நண்பர்களுடன் ரயிலின் பக்கவாட்டில் தொங்கியபடி அவர் பயணம் மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் ஆபத்தை உணராமல் ரயிலின் மேற்கூரையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





