முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டை தெரிவித்த விஜயகாந்த்..!
சென்னையில் தேங்கிய மழை நீரை அகற்றியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டை தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியதற்கு இணங்க சென்னையில் தேங்கிய மழை நீரை விரைந்து ஆக்கிரமிப்புகளை கொண்டு அகற்றியதாக தெரிவித்துள்ளார்.
துரிதமாக நடவடிக்கையை மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் குறிப்பிட்டுள்ளார்.






