கழிப்பறை இருக்கு..ஆனால் தரவில்லை..அரசு மருத்துவமனையில் அவலம்..!
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் கதவுகள் இல்லாமல் இருப்பதாக நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுக்கும் முன்பு மருத்துவமனை நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகளும் கூறி நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





