பொது கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது..!
திருச்சியில் பொது கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார். புதூரில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவில் பொது கழிப்பிடம் உள்ளது. இதில் ஜன்னல் வழியாக வரும் பெண்களை மணிகண்டன் என்பவர் வீடியோ எடுத்து வந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு நபரான மணிகண்டன் என்பவர் செல்போனை பறித்து சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மணிகண்டனை காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.



