ஆய்வின் போது மழை நீரில் தவறி விழுந்த நகர் மன்ற தலைவரின் கணவர்..!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அமைச்சர் நாசர் ஆய்வு பணிக்கு சென்ற பொழுது நகர் மன்ற தலைவரின் கணவர் மழை நீரில் தவறி விழுந்தார். பூந்தமல்லியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது தேங்கியிருந்த மழை நீரில் நகர் மன்ற தலைவர் காஞ்சனாவின் கணவர் சுதாகர் தவறி விழுந்தார். இதனால் ஆய்வில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.





