இளைஞருடன் ஊர் சுற்றியதால் மகளுக்கு பூச்சிக் மருந்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளிக்கு செல்லாமல் இளைஞருடன் ஊர் சுற்றியதால் பெற்ற மகளின் வாயில் பூச்சி மருந்தை ஊற்றி தற்கொலை செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வராமல் இளைஞர் ஒருவருடன் வெளியே சென்று வருவதை அறிந்த மாணவியின் தந்தை ஆத்திரத்தில் மகளை சரமாரியாக அடித்து பூச்சிக்கொல்லி மருந்தை மாணவியின் வாயில் ஊற்றி தாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் மாணவியை மீட்டு உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






