கள்ள காதலியின் கணவரை கொன்ற கள்ள காதலன்..!
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 52 வயதான மைக்கேல் துரை பாண்டியன் என்பவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் பலியானார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வெங்கடேசன் என்ற முப்பத்தி ஆறு வயது கொத்தனாரை கைது செய்தனர்.
துறை பாண்டியனின் மனைவியுடன் தான் திருமணம் கடந்த உறவு வைத்திருந்ததால் அவரை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.





