பெட்ரோல் பாட்டில் பக்கத்தில் இருந்த செல்போன்..திடீரென வந்த அழைப்பால் நடந்த விபரீதம்..!
சென்னை கோயம்பேட்டில் பெட்ரோல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலுடன் சேர்த்து இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்த போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
உடல் பருமனாக இருந்ததால் தீப்பிடித்ததும் வண்டியில் இருந்து உடனே இறங்க முடியவில்லை என அவர் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95% தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.





