வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்..!
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரில் கார் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கிய நிலையில் மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குரோம்பேட்டையை சேர்ந்த முகமது ரஃபீக் அவரது மனைவி 10 வயது மகளாகியோ ஒரு காரில் தரைப்பாக்கம் சாலை வழியாக சென்றனர்.
செம்பரம்பாக்கத்தை சேர்ந்த உபநீர் வேகமாக வந்ததால் அடையார் ஆற்றில் அடுத்த செல்லப்பட்டு முட்புதற் செடியில் கார் சிக்கியது.
இதையடுத்து விளக்கு வெளிச்சம் கூட இல்லாத நிலையில் தீயணைப்பு துறையினர் வரும் வரை காத்திடாமல் விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு காரின் மேல் அமர வைத்து காரில் கயிறை கட்டி மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.





