பப்ஜி கேம் விளையாட 3 லட்சம் கேட்ட சிறுவன்..! தந்தை மறுத்ததால் தற்கொலை..!
திருப்பதியில் பாப்ஜி கேம் விளையாட மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டு தந்தைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலனியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூங்கும் நேரம் போக இரவு பகல் பாராமல் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பப்ஜி கேமில் இடம்பெறும் துப்பாக்கிகளை வாங்குவதற்கு தந்தையிடம் அவர் மூன்று லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரம் கண்ணை மறைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். இதுபற்றி திருப்பதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






