ரொம்ப பயமா இருக்கு எனக்கூறிய தமிழக மாணவர் அதிர்ச்சி போட்டி..!
உக்ரைனில் இருக்கக் கூடிய பொதுமக்கள் தங்களுடைய உயிர்களை பாதுகாக்க அங்கு இருக்கக்கூடிய மெட்ரோ சுரங்க பாதைகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன.
வழக்கமாக குண்டுகள் வீசப்படும் பொழுது தங்களுடைய உயிர்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பதுங்கு குழிகளில் தான் தங்குவார்கள். ஆனால் தற்போது நிலைமை மோசமாகி வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் பயந்து தங்களுடைய உயிர்களை காத்துக் கொள்ள அங்கு இருக்கக்கூடிய சுரங்க பாதைகளில் பதுங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்துக் குண்டுகள் வீசப்படுவதாகவும், எங்களுக்கு ரொம்ப பயமாயிருக்கு என தமிழக மாணவர் அளித்த பேட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.






