கல்வி நிதி தொடர்பான வழக்கு; தமிழக அரசு என்றும் அடிபணியாது என மத்திய அரசுக்கு பதில்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
அதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழக அரசு என்றும் அடிபணியாது என்று கூறியுள்ளார்.






