தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக புற்று நோய்க்கு கிளியர் ஆர் டி மற்றும் சின்கரனி வசதியுடன் கூடிய டொமோ தெரபி கதிர்வீச்சு சிகிச்சை மையம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தனர். தொடர்ந்து பேசிய மருத்துவமனை தலைவர் குரு சங்கர் டொமோ தெரபி என்பது புற்று நோய்க்கான ஒரு சிகிச்சை முறையாகும், நோயாளி சிகிச்சை மேஜையில் படுத்திருக்கும் நிலையில் விடுபட்ட பல திசைகளில் இருந்து புற்றுகட்டியை இலக்காகக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை இதன் மூலம் செய்யப்படுகிறது.
இதன் முக்கிய அம்சம் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை திறன்களை கணிசமான அளவு வலுவாகி இருக்கிறது ஒரு புரட்சிகரமான புதிய பாதையை அளிக்கும் முன்மாதிரியான நிகழ்வுகளை ஒன்றாக திகழ்கிறது.இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும்.இந்த சிகிச்சையில் பக்க விளைவுகள் மிக மிகக் குறைவு.
இந்தியாவில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.