குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை ..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 20 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் கடிதம் மற்றும் மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






