மதுரையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக்கோரி முற்றுகை போராட்டம்
மதுரையில் கொரோணா பரிசோதனையை அதிகரிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்பி எம்எல்ஏக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
நூற்றுக்கும் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டும் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்னற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.போராட்டத்தின் போது நோயாளி போல ஒருவரை படுக்க வைத்து அழைத்து வந்தனர்.






