சினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளி
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் துப்புரவு பணியாளர் ஒருவர் பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. மஹாதேவ் ஜாதவ் என்ற அந்த துப்புரவு தொழிலாளி கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்.
தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவதாக அவர் தெரிவிக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மகாதேவ் ஜாதவ் உடன் இணைந்து பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.





