--- --:--:-- --

புதிய தொழிலை தொடங்கிய சீரியல் நடிகை வைஷாலி..!

22

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் முத்தழகு, ஒருவர் இரு மனைவிகளுடன் வாழும் இந்த கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள், பரபரப்புடன் ஓடுகிறது.

 

இதில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷாலி. இப்படிபட்ட வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

நடிகை வைஷாலி கடந்த வருடம் தான் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சத்யா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே சத்யா ஒரு திருமண மண்டபத்தை நடத்தி வந்துள்ளார்.

 

இந்த நேரத்தில் தான் வைஷாலி மற்றும் சத்யா இருவரும் இணைந்து ஒரு பிட்னஸ் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளனர். அதன் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தங்களது புதிய ஆரம்பம் உங்களின் ஆதரவு வேண்டும் என நடிகை போஸ்ட் போட்டுள்ளார்.

 

Right Menu Icon