தனது இரண்டாவது மகனுடன் வீட்டிற்கு வந்த சீரியல் நடிகை ஆல்யா மானசா..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை ஆல்யா மானசா. அதன்பிறகு திருமணம், குழந்தை என இருந்தார்.முதல் குழந்தை பெற்ற கையுடன் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க வந்தார்.
இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருந்தார். ஆனால் சீரியல் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். கடந்த மாதம் 26ம் தேதி அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்க சஞ்சீவ் வீடியோவுடன் அந்த அழகிய தருணத்தை ரசிகர்களுக்கு காட்டினார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா தனது மகனுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்கப்பட்டது. அதோடு அவரது மகள் ஐலா ஓடிப் போய் தனது தம்பியை பார்க்க வரும் அழகிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.





