மூத்த பாடலாசிரியர் மாயா கோவிந்த் காலமானார்..!
பாலிவுட்டின் மூத்த பெண் பாடலாசிரியர் மாயா கோவிந்த் காலமானார். அவருக்கு வயது 81. எழுபதுகளில் தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான பாடல்களை எழுதியவர் மாயா கோவிந்தன் அக்ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பிரபலமாகின.
மூளையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மாயா கோவிந்த் சிகிச்சை பலன் அளிக்காமல் மும்பையில் காலமானார்.






