பட்டப் பகலில் மெரினாவில் அரிவாள் வெட்டு..!
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அரிவாளால் வெட்டிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது.
மெரினா கடற்கரையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






