தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..!
பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி நேரத்தில் வளாகத்தில் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய பொறுப்பு ஏற்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் நடந்து கொள்ளும் விதம் விசாரணையில் உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





