--- --:--:-- --

முன்னாள் முதல்வரையும் விட்டுவைக்காத பறக்கும்படை! வீடு புகுந்து அதிரடி சோதனை

flying squad

புதுச்சேரியில், முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

 

தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

 

அவ்வகையில், புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

திலாஸ்பேட்டையில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon