5 ஜி சேவையை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!
இந்தியாவில் 5 ஜி சேவையை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்தியாவில் டிஜிடல் கட்டமைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லி பிரகதி மைதானத்தில் நாளை ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை சேவையை துவக்கி வைக்கிறார். அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்ற நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை துவக்கி வைக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





