டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை..!
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜாவை கடந்த 9-ந் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்தனர்.





