5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி கேட்கும் பைசர்..!
அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரொனா வைரஸ் மரபணு மாற்றமடைந்து உருமாறியது முன்பை விட வேகமாக பரவும் தன்மையுடன் உருமாறிய கொரொனா இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் பூஸ்டர் டோசை மூன்றாவதாக செலுத்த முடிவு செய்தனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசியை செல்வதற்கு அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவன நிறுவனம் பெற்றுள்ளது.






