மோடியின் வழியில் மக்கள்: இளையராஜா
ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி இசையமைப்பாளர் இளையராஜா X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி’ என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரதமரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் துணை நிற்பர் என்பதை உணர்த்தும் வகையில் இளையராஜா இதனை தெரிவித்துள்ளார்.



