அன்புமணி சுற்றுப்பயணத்தில் மாற்றமில்லை!
நாளை திட்டமிட்டப்படி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்கும் என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. அன்புமணியின் நடைப்பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால், சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என அன்புமணி தரப்பு கூறியுள்ளது. இதனால், பாமக உள்கட்சி மோதல் இன்னும் தீரவில்லை என்பது தெளிவாகிறது.






