அக்கா-தங்கை சொல்லிட்டு நிக்சன் பேசிய பேச்சு..!
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் பொதுவாக ஒரு விஷயம் நடக்கும், எந்த மொழி நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கும். வேறு ஒன்றும் இல்லை புதிய காதலர்கள் உருவாகி இருக்கிறார்கள், ஆனால் தமிழில் ஒளிபரப்பாகும் இந்த 7வது சீசன் எல்லாவற்றிலும் புதியதாக உள்ளது. அதேபோல் காதலும் புதிய வகை காதலாக உள்ளது.
முதலில் மணி-ரவீனா பேசப்பட்டார்கள், அடுத்து நிக்சன்-ஐஸ்வர்யா, இப்போது நிக்சன்-பூர்ணிமா என பேச்சு அடிபடுகிறது.நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் நிக்சன் நாங்கள் அண்ணன்-தங்கை என கூறிவிட்டு சில கேவலமான விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அண்மையில் அவர்கள் ஒன்றாக செய்யும் விஷயங்கள், நிக்சன் மாயாவிடம், பூர்ணிமா பார்க்கும் பார்வை இருக்கே, என்னை நீண்டநாள் காதலித்தவர் போல் பார்க்கிறார் என்கிறார்.இன்னொரு வீடியோவில் பூர்ணிமா, நிக்சன் எனது காதலன் என கூறுகிறார்.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் வீடியோக்களை பதிவு செய்து இதெல்லாம் எவ்வளவு கேவலம், அண்ணன்-தங்கை பாசத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என மோசமாக திட்டி வருகிறார்கள்.





