புதுச்சேரியில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்..!
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரொனா பரவல் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி உணவு விடுதிகள், தேநீர் கடைகள் மற்றும் மது கடைகளில் பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






