தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்..!
எடப்பாடி அருகே தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் மயானத்தில் தகனம் செய்ய முயன்ற போது போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஜீவானந்தத்திற்கும் கடந்த ஐந்தாம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் விமலாதேவி சம்பவத்தன்று நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவசரமாக பெண்ணின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.





