மதுரையில் முதியவரை கொலை செய்த மர்ம நபர்கள்..!
மதுரை மாவட்டத்தில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராவ். இவர் தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வந்த நிலையில் நிவேதா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்மமான நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





