சேலம் மத்திய சிறை பேக்கரியில் பணமோசடி – வார்டன் சஸ்பெண்ட்
சேலம் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் விற்கப்படும் பொருட்களுக்கு தனது மாமியாரின் ஜிபே கணக்கு மூலம் பணம் பெற்று வந்த சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டாக சுமார் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொருட்கள் விற்பனையாகும் அதே நேரத்தில் சிறையின் கணக்கில் குறைந்த தொகையே வரவு வந்திருப்பதால் நடத்தப்பட்ட விசாரணையில் வார்டன் சுப்பிரமணி மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது.






