அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்..!
அன்னம், சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் வரும் தொடர்களில் ஒன்று. அப்பா இருந்தும் தனது தாய் மாமன் பாசத்தில் வளரும் அன்னம் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த சீரியல் உள்ளது. இப்போது கதையில் அன்னம் கணவர் பண விவகாரம் தவறு செய்தார் என போலீஸ் கைது செய்ய பின் அவர் எந்த தவறும் செய்யவில்லை என விடுதலை ஆகிறார்.
சீரியல் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாக தற்போது தொடரில் இருந்து முக்கிய நாயகி வெளியேறியுள்ளார்.அவர் யார் என்றால் திவ்யா கணேஷ் தான். சுமங்கலி, கேளடி கண்மணி, லட்சுமி வந்தாச்சு, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து வந்தவருக்கு அன்னம் ஜெனி கதாபாத்திரம் நல்ல ரீச் கொடுத்தது. ஆனால் அவர் தற்போது தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




